Saturday, July 18, 2015

வளர்கிறது நம் நாடு!
விடுதலை நாள்
      15.08.2015
------------------------- ---------
கழனி தொடங்கி கணினி வரைக்கும்
வளர்ச்சியில் சாதனை வெற்றிக் கொடியைத்
தளர்ச்சியின்றி நாட்டுகின்றார் இந்தியர்கள் எங்கும்!
வளர்கின்ற தாய்நாட்டைப் பார்.

மற்றநாட்டைப் போல வளர்ச்சியில் தொய்வுண்டு! பல்வேறு
சுற்றடுக்குக் காரணங்கள் அதற்குண்டு! செந்தமிழே!
தொட்டுத் தொடர்கின்ற சோதனையின் கொம்பொடித்து
வெற்றிநடை போடுகின்றோம் நாம்.

விடுதலைக்குப் பின்னே துறைதோறும் ஏற்றம்!
புதுமைப் பொலிவுடன் அருமைப் பணிகள்!
மிடுக்குடன் சொல்வோம் இந்தியன் என்றே!
அடுந்துநாம் வல்லரசு தான்.

0 Comments:

Post a Comment

<< Home