Saturday, December 12, 2015

தமிழின் அழகு!
------------------------------
ஆர்த்தெழு கடலின் அலைகள்-- விண்
பார்த்தெழும் ஓங்கிய மலைகள்!

காற்றிடை பறக்கும் புள்ளினம்--மண்
சேற்றிடை மலர்செந் தாமரை!

அஞ்சற் கரியவன விலங்கு--அங்கே
கொஞ்சிப் பேசிடும் கிள்ளை!

காலை வானின் சூரியன்--பார்த்துச்
சோலையில் மலர்ந்திடும் பூக்கள்!

மாலை மறைந்ததும் இரவில்--- தோன்றும்
அமுதைப் பொழியும் நிலவு!

மலையிடைப் பொழியும் அருவி--மரத்தில்
தாவிக் குதிக்கும் குரங்கு!

இயற்கையின் அழகைக் கூட்டும்---பார்க்கப்
பரவச மூட்டும், உண்மை!

தாய்த்தமிழ் அழகின் முன்னே---அனைத்தும்
மின்னலாய் மறையும் காணீர்.

0 Comments:

Post a Comment

<< Home