Thursday, December 10, 2015

வேலெறியும் நேரமல்ல!
------------------------------------------------
பாய்ந்துவரும் வெள்ளம் பயந்தோடும் மாந்தர்கள்!
ஊர்முழுதும் காட்சி பதறுதம்மா மக்களாட்சி!
பார்க்கின்றோம் பார்க்கின்றோம் வேதனையின் காட்சிகளை!
யாருக்குத் தீங்குசெய்தோம் சொல்?

சென்றவர்கள் சென்றவர்தான் வெள்ளத்தில் மீண்டிங்கே
வந்தவர்கள் வந்தவர்தான்
காணாமல் போனவர்கள்
எங்குசென்றார் ?என்னவானார்?
எவர்வந்து சேதி சொல்வார்?
ஒன்றும் புரியவில்லை யே!

காரணங்கள் யாரோ? அலசுகின்ற நேரமல்ல!
காயங்கள் ஆற மனிதநேய நற்பணிகள்
ஆர்வமுடன் தொட்டுத் துலங்கினால் நல்லது!
வேலெறிந்து பார்க்கவேண்டாம் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home