Thursday, December 10, 2015

அவலம்!
------------------------
அண்ட சராசரம் நின்று குலுங்கிட
வந்து முழங்கின பேரிடி மாமழை!
அஞ்சி நடுங்குதே எல்லா உயிர்களும்
பஞ்சாய்ப் பறக்குது வாழ்வு.

பறந்தனர் மக்களோ ஊர்களை நோக்கி!
பறந்தனர் தங்கள் உயிர்களைக் காக்க!
உறவை மறந்தார்! உடைமை மறந்தார்!
அடமழைக் கோலம் இது.

0 Comments:

Post a Comment

<< Home