Thursday, July 07, 2016

பட்டறிவு!

புத்தகம் மட்டுமே வாழ்வல்ல!சற்றெழுந்து
வாழ்வென்னும் புத்தகத்தை நீயுணர -- பாய்ந்துவா!
கூட்டைத் துறந்துவா!ஆகா இயற்கையின் பாவினங்கள்
காட்சியைக் கற்றுணர வா.

அலைக்கரத்தின் ஆட்டம் மேகத்தின் மூட்டம்
மலையின் உயரங்கள் சூரியனின் விந்தை
நிலவின் அமுதம் அருவியின் பாட்டு
சலசலத் தோடும் நதிகள் பண்கள்
கலகலக்கும் புள்ளினம் கண்கவரும் காட்டில்
உலவும் விலங்கு  இவையெல்லாம் வாழும்
உலகமே மற்றொரு புத்தகம் வாசி!
வளர்த்துக்கொள் பட்டறிவைத் தான்

0 Comments:

Post a Comment

<< Home