Sunday, October 02, 2016


கல்கத்தாவில் நடந்த
உண்மை நிகழ்வு
1947 ஆகஸ்டு 13 ஆம் தேதி

" நீங்கள் எனது ஒரு மனித இராணுவப்படை! தயவு செய்து
கல்கத்தாவுக்குச் செல்லுங்கள்" என்று கூறினார் மவுண்ட்பேட்டன் .
 ஷகீத் சுஹ்ரவர்த்தியும்கேட்டுக் கொண்டார்.

குண்டு துளைக்காத மேடை! துணிச்சலாக
இன்று  முழங்கும் தலைவரின் வீர உரை!
அன்றோ ஒருமனித ராணுவமாய் காந்தியண்ணல்
வன்முறையைக் கட்டவிழ்த்த கும்பலுக்கு மத்தியிலே
தன்னந் தனியாகத் தானே நடந்துசென்றார்!
வன்சொற்கள் கூச்சல்! எறிந்தனர் கற்களை!
அன்பென்னும் ஆயுதம் ஏந்தி  மனவலிமை
ஒன்றே துணையாக சென்றார்!! உரைகேட்டு
தங்களது ஆயுதத்தை போட்டனர் மண்மீது!
அண்ணலைப்போல் யாருளார்? இன்று.

0 Comments:

Post a Comment

<< Home