Tuesday, October 04, 2016

மனக்குறள்

அகரவரிசை


அவமானந் தன்னை வெகுமான மாக்கும்
உயர்மனப் பக்குவத்தைப் போற்று.


ஆசை! வரம்புகளை மீறினால் பேராசை!
நீசனாக்கிப் பார்க்கும் நகைத்து.


இன்சொற்கள் உள்ளத்தைப் பண்படுத்தும் தென்றலாகும்!
வன்சொற்கள் வன்புயல்தான் பார்.


ஈன்றெடுத்த பெற்றோர் நடமாடும் தெய்வங்கள்!
தூண்டித் துலங்கவைப்பார்! சாற்று.


உறவில் விரிசலா? உட்பகையைத் தூண்டும்!
உறவுகளைத் தக்கவைக்கப் பார்.



எழுசீர்க் குறள்கள் பொதுமுறை யாகும்!
வழுவாமல் பின்பற்றி வாழ்.

ஏற்றமா?துள்ளாதே! தாழ்வா? துவளாதே!
மாற்றத்தில் பக்குவம் கொள்.

ஐம்புலனை எண்சான்தான் ஆளவேண்டும்! எண்சானை
ஐம்புலன்கள் ஆள்தல் இழிவு.



ஒழுக்கமற்ற கல்வி உழவற்ற தேசம்
இருந்தும் பயனென்ன? செப்பு.


ஓட்டை விழுந்த மரக்கலமும் சோம்பேறிக்
கூட்டமுள்ள இல்லறமும் ஒன்று.


ஔவியம் பேசும் இழிகுணம் கொண்டவர்கள்
இவ்வுலக வாழ்வின் பதர்.

எஃகுவாளா? புல்கட்டா? வல்லவ னாயிருந்தால்
எப்படியும் வென்றிடலாம் இங்கு.



கண்டபடி வாழ்வதை விட்டுவிட்டு நல்லொழுக்கப்
பண்புடன் வாழ்தல் சிறப்பு.
கா

காசுபணம் நல்வழியில் வந்தால் நிலைத்திருக்கும்!
மாசுவழி என்றால் இழிவு.

கி

கிளைகளென்னும் சுற்றம் படரவைத்துப் போற்று!
களைகளென்னும் வன்பகையை நீக்கு.
கீ

கீழ்த்தர எண்ணங்கள் உள்ளத்தைப் பாழாக்கும்!
போர்க்கள மாக்கும் உணர்.

கு

குறுக்குவழி வாழ்க்கை உளைச்சலைத் தூண்டும்!
உறுத்தலில் ஆட்டுவிக்கும்! பார்.
கூ

கூழெனினும் தன்னுழைப்பால் வந்தால் அமுது!
பாலெனினும் மற்றவழி நஞ்சு.

0 Comments:

Post a Comment

<< Home