Tuesday, July 25, 2017

ரணம்
---------------
ரணப்பட்டு ரத்தம் உடலில் வழிந்தால்
குணப்படுத்தக் கூடும்! இதயத்தில் என்றால்
குணப்படுத்த எப்படிக் கூடும்? தமிழே!
ரணப்பட்ட ஆண்டுகள் ஒன்றா! இரண்டா!
சுமக்கின்றேன் பத்தாண்டாய் நான்.


குத்திக் கிளறி பழைய  நிகழ்வுகள்
அப்பப்பா கண்முன் நகைக்கிறதே! என்செய்வேன்?
கொத்தும் பருந்தாகி வந்துவந்து நிற்கிறதே!
குற்றம் எவர்மீது கூறு?

0 Comments:

Post a Comment

<< Home