Tuesday, November 14, 2017


காக்கும் கரங்களா? தாக்கும் கரங்களா?

கடலோரக் காவல் படைகளின் போக்கால்
சுடப்பட்டு வேதனைக்கே உள்ளாகி நாளும்
வதைபடும் மீனவரைக் காக்கவேண்டும்! யார்தான்
கடமையைச் செய்வாரோ வந்து?

இந்திய மற்றும் இலங்கைக் கடற்படை
அங்கங்கே மீனவரை மாறிமாறி வேதனையின்
அங்கமாக்கிப் பார்த்தால் மீனவர்கள் என்செய்வார்?
நம்புவது யாரைத்தான் சொல்.

காக்கும் கரங்களே தாக்கும் நிலையெடுத்தால்
தாக்கும் கரங்களெல்லாம் என்னென்ன செய்யுமோ?
ஏக்கத்தைத் தீர்த்துப் பாதுகாப்பாய் மீன்பிடிக்கும்
பொன்னாளை என்றுகாண்பார்? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home