Saturday, November 04, 2017


அடிக்காதே

பெண்களை ஆண்கள் அடிப்பது குற்றந்தான்!
பெண்கள் மரியாதை தந்தே அடங்குகின்றார்!
பெண்கள் எரிமலையாய்ச் சீறி எழுந்துவிட்டால்
பெண்களைத் துன்புறுத்தும் ஆண்கள் நிலைகுலைவார்!
பெண்ணினத்தின் தாய்மையைப் போற்று!.

பெண்களும் ஆண்களை வாழ்வில் மதிக்கவேண்டும்!
கண்டபடி வாழ்வேன் என்பதும் கூடாது!
பெண்ணுரிமை என்றேதான் ஆணை மதிக்காமல்
இங்கே புறக்கணித்தல் தீது.

பெண்களும் ஆண்களும் விட்டுக் கொடுக்கவேண்டும்!
இன்முகம் இன்சொற்கள் இல்லறத்தில் போற்றவேண்டும்!
தன்னலம் விட்டுக் குழந்தைகள் வாழ்க்கைக்கே
 முன்னுரிமை தந்தேதான் வாழவேண்டும்! வாழ்வோர்க்கே!
என்றும் நிம்மதி உண்டு

0 Comments:

Post a Comment

<< Home