Thursday, December 21, 2017


குறுந்தொகை

வேதனை தீருமா?

பாடல் 79

பாடலாசிரியர்:
குடவாயிற் கீரத்தனார்

கான யானை தோனயந் துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே
-------------------------------------------------------------------------------
தோழியே! அவருக் கிணையாக நானில்லை?
ஈவிரக்க மின்றித்தான் சென்றதால் ஏங்குகிறேன்!
 ஓவியமாம் என்னவர் சிற்றூர்க்குள் சென்றாரோ!
யானையோ ஓமை மரத்தை உரித்தபின்
கானகத்தில் நிற்கும் உலர்ந்த மரக்கிளையில்
கால்பதித்துப் பெண்புறா ஆண்புறாவைக் கூப்பிடும்
பாதையில் உள்ளதே சிற்றூர்! அதைக்கேட்டு
பேதையென்னை நெஞ்சில் நினைப்பாரோ?மாட்டாரோ?
வேதனை தீர்ப்பாரோ? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home