Saturday, April 28, 2018



இனியவை நாற்பது 29

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்


கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே
;உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
'எளியர், இவர்!' என்று இகழ்ந்து
 உரையாராகி,ஒளி பட வாழ்தல் இனிது.
-----------------------------------------------------------------------------------
நீசரை நீக்கியே வாழ்தல் இனிதாகும்!
நாடறிய தன்னுயர்வைச் செம்மைப் படுத்தியே
மாசற்ற பண்புடன் வாழ்தல் இனிதாகும்!
வாடும் வறுமையிலும் செம்மை யுடன்வாழ்தல்
ஈடற்ற வாழ்வின் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home