Wednesday, May 09, 2018

இனியவை நாற்பது 32

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல். 32


படித்தவர்கள் கூறும் கருத்தின் பயன்கள்
நெறிப்படுத்தும் பண்போ இனிதாகும்! அன்பின்
துடிப்பின்றி ஆள்பவரின் கீழிங்கே நாளும்
துடிதுடித்து வாழாமை என்றும் இனிதே!
கெடுதிகள் செய்தாலும் அப்படிச் செய்த
கெடுமதி் யாளரிடம் அன்பாய் இருக்கும்
நடுநிலைத் தன்மை இனிது.

0 Comments:

Post a Comment

<< Home