Saturday, April 28, 2018

இனியவை நாற்பது 31

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே
;கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும்,
ஆராய்ந்துஅறிந்து உரைத்தல் ஆற்ற இனிது.
------------------------------------
அடைக்கலமாய் வந்தவரின் துன்பத்தைப் போக்கும்
நிறைவான பண்பே இனிது! கடமை
நிறைவேற்ற இங்கே கடனுடனை வாங்கி
முறைப்படுத்தல் என்றும் இனிதே!அறிவில்
சிறந்தோராய் வாழ்ந்தாலும் பேசும் பொருளை
அகத்திலே ஆராய்ந்து சொல்தல் இனிது!
கடமையைக் கண்போலப் போற்று.

0 Comments:

Post a Comment

<< Home