Wednesday, May 09, 2018


இனியவை நாற்பது 33

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே
தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே
வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது. 33

ஊர்மக்கள் இங்கே வெறுக்காத நற்செயலை
ஊரறிய செய்கின்ற ஊக்கம் இனிதாகும்!
சோர்வளிக்கும் சோம்பலின்றி காட்டும் முயற்சிக்குத்
தோள்கொடுக்கும் ஆண்மை இனிதாகும்! வீரமிகு
போர்முனையில்  ஆற்றல் மிளிரும் அரசனுடன்
போரிடும்  வேந்தன் புகழுக்  கினிதாகும்!
பாரிலே நற்புகழை நாட்டு.

0 Comments:

Post a Comment

<< Home