Saturday, May 12, 2018


பாடல் 34

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது.
-----------------------------------------------------------------------------------------------
தெரியாத ஊர்நோக்கி நாமோ இரவில்
புரிந்ததுபோல்  போகாமல்  உள்ள(து ) இனிது!
தெளிவாகச் சொல்வதை இங்கே மறதி,
துளியுமின்றி சொல்தல் இனிது! கயவர்
வலியவந்து நட்பிழை பின்னுவதை என்றும்
தவிர்த்தலோ வாழ்வில் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home