Saturday, May 12, 2018



பாடல் 36

அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
வவ்வார் விடுதல் இனிது.
---------------------------------------------------------------------------------------------
உள்ளத்தின் மாசாம் அழுக்காறு சொற்களைச்
சொல்லாமல் வாழ்தல் இனிதாம்!சினமென்னும்
பொல்லாத தீய குணத்தைத் தவிர்த்தேதான்
நல்லவராய் வாழ்தல் இனிதாம்! அடுத்தவர்
துய்க்கும் பொருளைப் பறிக்காமல் அப்பொருளை
உள்ளம் மறத்தல் இனிதாகும்! வாழ்க்கையில்
எள்ளளவும் பற்றின்(றி) இரு.

0 Comments:

Post a Comment

<< Home