Saturday, May 12, 2018


பாடல் 37

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல்.
--------------------------------------------------------------------------------------
துள்ளும் இளமைப் பருவத்தை வாட்டுகின்ற
பொல்லா முதுமையென எண்ணல் இனிதாகும்!
உள்ளத்தால் ஒன்றிவாழும் சுற்றத்தார் இன்சொல்லைத்
துய்த்தல் இனிதாகும்! மூங்கிலொத்த தோள்களும்
அல்லிமலர்  மென்மையும் கொண்ட மகளிரை
கொல்கின்ற நஞ்சாய் உணர்தல்   இனிதாகும்!
எல்லாம் நிலையில்லை இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home