Monday, November 18, 2019

திருக்குறள் குழந்தைப் பாடல்
-------------------------------------------------------
கொல்லாமை-33 
----------------------------------------------------------------
உயிரை வதைத்தல் இழிந்த செயலாகும்
--------------------------------------------------------------------
உயிர்க்கொல் லாமை அறச்செயலாம்
உயிர்க்கொலை  பாவச் செயலாகும்!

நீதி நெறியே பகிர்ந்துண்ணல்!
அறங்களில் அதுவே முதன்மையாம்!

அறங்களில் சிறந்தது கொல்லாமை!
அடுத்தது இங்கே பொய்யாமை!

வாழ்வைக் கண்டு நடுங்கியேதான்
துறவறம் ஏற்றோர் கோழைதான்

இல்லறக் களத்தில் கொல்லாமை
போற்றும் மாந்தர் வீரர்தான்!

இப்படிப் பட்ட நல்லவரைச்
சாவும் நெருங்கத் தயங்கிடுமே!

தனது உயிரை இழந்தாலும்
மற்றோர் உயிரை அகற்றுவதை
இங்கே என்றும் செய்யவேண்டாம்!

கொலையைச் செய்வதால் பலவளங்கள்
கூடிக் குலவி வந்தாலும்
நேர்மை தவறிய பயன்களையோ
இழிவாய்க் கருதுதுவர் சான்றோர்கள்!

கொலையைத் தொழிலாய் ஏற்றவர்கள்
இழிந்த நீசப் பிறவிகளாம்!

நோய்கள் மொய்க்க வறுமையுடன்
இந்தப் பிறவியில் வாடுபவர்
ஏற்கனவே வேதான் கொலைக்குற்றம்
சுமந்தோர் என்பார்  முன்னோர்கள்!

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home