Monday, December 30, 2019

தவச்சான்றோன் இரமணர் பிறந்தநாள் இன்று!

அருளாசி வேண்டியே வாழ்த்து!

30.12.19

திருச்சுழியில் முப்பதாம் நாளில் டிசம்பர்
இரமணர்  இங்கே பிறந்தார்! பக்திப்
பரவசத்தைப் பின்பற்றி ஆன்மிக நாட்டம்
பெருக்கெடுக்க வாழ்ந்தார் வளர்ந்து.

சிற்றப்பா வீட்டில் இறப்பு நிகழ்விலே
கற்றபாடம் நான்யார்? எனும்தேடல் ஊக்கத்தில்
உற்றார் உறவுகளை விட்டே அகன்றுவிட்டார்!
பற்றைத் துறந்தேதான் உண்மைத் துறவியாய்
வந்துவிட்டார்  அண்ணா  மலையாரின் கோவிலுக்கே!
இங்கே புரிந்தார் தவம்.

ரமணரோ ஆசிரம வாழ்க்கையை ஏற்றார்!
அமைதியான பார்வை அறவுரை என்றே
இமைப்பொழுதும் சோராமல் பேரருள் தந்தார்!
தனைவென்ற அந்தத் தவச்சான்றோன் ஆசி
தனைநாடும் பக்தியை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home