Saturday, January 04, 2020

பொங்கலோ பொங்கல்!

பொங்கல் வைக்க கூடுவோம்
பொங்கலோ பொங்கல் பாடுவோம்

வண்ண வண்ணக் கோலங்கள்
வகைவகை யாக போடுவோம்

கண்ணைக் கவர போடுவோம்
கருத்தைக் கவர் போடுவோம்

அடுப்பில் நெருப்பை மூட்டியே
மஞ்சள் கட்டிய பானையில்
அரிசி தண்ணீர் நிரப்பியே
அருமைப் பொங்கல் வைப்போமே

கரும்பை இரண்டு பக்கத்தில்
நிறுத்தி வைத்தே நிற்போமே

சூரியன் வானை வணங்கித்தான்
நன்றி சொல்லிப் பாடுவோம்!

உழவர் வாழ்க வாழியவே
உயிரைக் காப்போர் வாழியவே

வளமாய் வாழ பாடுவோம்
தரமாய் வாழ பாடுவோம்

தைமா தத்தின் முதல்நாளே
தமிழ்ப்புத் தாண்டு நாளாகும்

அடுத்து மாட்டுப் பொங்கல்தான்
அகத்தால் நன்றி கூறிடுவோம்

வள்ளுவர் நாளைக் கொண்டாடு
வாழ்க்கை தழைக்க கொண்டாடு

மதுரை பாபாராஜ்












0 Comments:

Post a Comment

<< Home