Wednesday, March 18, 2020

மாணவ மாணவிகளே!

வாழ்க்கையைச் சந்திக்கப் பழகுங்கள்!

தேர்வுகளை நீங்கள் எழுதி, கடமையை
ஆர்வமுடன் நாளும் நிறைவேற்றி நாளைவரும்
தேர்வு முடிவுகளைப் பார்ப்பதற்குக் காத்திருக்கும்
ஆர்வம் புரிகிறது நன்கு.

எந்த முடிவெனினும் ஏற்கப் பழகவேண்டும்!
சந்தித்து வாழவேண்டும்! எல்லாமே நன்மைக்கே
என்றே நினைக்கவேண்டும்! தாழ்வு மனப்பான்மை
இன்றி நிமிர்வதே வாழ்வு.

எல்லோர்க்கும்  எப்படியும் வாழ்க்கை இருக்கிறது!
நல்லதே நாளும் நடைபெறும் நம்புங்கள்!
இவ்வுலகில் நம்பிக்கை ஒன்றேதான் ஊன்றுகோல்!
உள்ளத்தைப் பண்படுத்தப் பார்.

உனக்கென உள்ளதை யார்கெடுக்கக் கூடும்?
உனக்கில்லை என்பதை யார்கொடுக்கக் கூடும்?
மனமுவந்து நன்கு முயற்சிசெய்!  எந்த
முடிவெனினும் ஏற்கப் பழகு.

மதுரை பாபாராஜ்
18.3.20

0 Comments:

Post a Comment

<< Home