Wednesday, April 22, 2020

இலக்கிய நெறிச்சிந்தனைகள்
           100

ஈரோடு் தமிழன்பன் பாவினக் கருத்துக்குள்
வேரோடும் உள்ள உணர்வுகளை நூறிலே
தேரோட வைத்த விளக்கம் அற்புதம்!
பார்போற்ற வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

இலக்கிய வேந்தர் தமிழினியன் வாழ்க!

மூன்று மணித்துளியில்  நண்பர் தமிழியலன்
சான்றுடன் நாளும் இலக்கியச் சிந்தனையை
பாங்குடன் நன்கு விளக்கம் அளிக்கின்றார்!
நூறு விளக்கங்கள் இன்றுடன் தந்துவிட்டார்!
சாறு பிழிந்து தருகின்ற சாதனை
நூறையும் தாண்டவேண்டும்! ஆயிரத்தைக் காணவேண்டும்!
நூல்வடிவம் ஆகவேண்டும் வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home