Tuesday, April 21, 2020

குழந்தப் பருவத்தில் பாலு தந்த அதிர்ச்சி!

அரசரடி ஆரப்பாளையம் சாலை!

திலகா மெடிக்கல்ஸ்!

ஆர்வி நகரிலுள்ள சித்தப்பா வீட்டிற்கு
ஆர்வமுடன் அம்மா நடந்தேதான் சென்றுவிட்டார்!
பாலு தெரியாமல் பின்னால் தொடர்ந்துசென்றான்!
பாதி வழியில் தொடர்பறுந்து போனது!
பாலு திகைத்து நின்று விழித்திருக்க
லாரியில் வந்தவர் பாலுவைத் தூக்கியே
ஓரத்தில் அங்கே திலகா மெடிக்கல்சில்
ஈரமனங் கொண்டுதான் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்!
பாலுவைக் காணாமல் தேடி அலைந்தபோது
ஓரமாய் அந்த மருந்துக் கடையிலே
சாதுவாய் உட்கார்ந் திருந்தான்! அழைத்துவந்தோம்!
பாலு கொடுத்த அதிர்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home