Saturday, April 18, 2020

ஊரடங்கு காலத்து நாயகர்கள்!

செய்தித்தாள் போடுபவர்! பால்காரர்! நாமருந்த
நல்ல குடிநீரைக் கொண்டுவந்து சேர்ப்பவர்
எல்லா வகையான காய்கறி விற்பவர்
பல்பொருள் விற்கும் மளிகைக் கடைக்காரர்
மக்கள் விரும்பும் அசைவத்தை விற்பவர்
அக்கறையாய் வந்தே  எரிவா யுருளையைப்
பற்றுடன் கொண்டுவந்து வீட்டில் தருபவர்கள்
எல்லோரும் ஊரடங்கு காலத்தின் நாயகரே!
இல்வாழ்வின் மூச்சே இவர்.

மதுரை பாபாராஜ்







0 Comments:

Post a Comment

<< Home