Tuesday, April 21, 2020

எனக்கும் அக்காவுக்கும் உணவு கொண்டுவந்த துரைராஜ்!
புனித ஜோசப் கான்வெண்ட் பள்ளி

1958 முதல்

கேப்ரன்ஹால் ஆலயத்தில் நாளும் மணியடித்து
ஈட்டிய சம்பளத்தில் வாழ்ந்தவர்! நல்லவர்!
வல்லவர்!
நானும் தமக்கையும் புனிதஜோசப் பள்ளியில்
போய்ப்படித்தோம்! மோதிலால் சாலையில் வீடிருக்க
பாத்திரத்தை  தூக்கிகொண்டு பேருந்தில் தான்வருவார்!
பேருந்து நிற்கும் மகாலில்! அங்கிருந்து
ஓடி வருவார் துரைராஜ் பள்ளிக்கு!
ஏன்நீங்கள் மெல்ல வரலாமே என்றுசொன்னால்
போங்கதம்பி நேரத்தில் சாப்பாடு நான்தரணும்!
நீங்கள்ளாம் சாப்பிடணும் என்றே சிரித்திடுவார்!
தாங்குவார் அப்படி! அத்தகைய நற்குணம்
ஏந்தியே வாழ்ந்தவர்! நாளும் கடமையினை
ஊன்வலிக்க செய்தவர்! நாளும் உழைத்தவர்!
நான்மறக்க லாமோ துரை?

மதுரை பாபாராஜ்






0 Comments:

Post a Comment

<< Home