Monday, April 20, 2020

நடிகர் விஜயகாந்த்

குறள் 212:

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

கொரோனாவின் பாதிப்புக் குள்ளாகி நெஞ்சு
வலியால் இறந்த நரம்பியல் சார்ந்த
மருத்துவரை இங்கேதான்  நல்லடக்கம் செய்ய
பொதுமக்கள் ஒன்றாய் மறுத்த நிலையோ
கொடுமையின் உச்சம் உணர்.

யாருக்கும் இந்த நிலைமை இனிவேண்டாம்
பாரிலே என்றிங்கே  நல்லெண்ணங் கொண்டேதான்
மாரிபோல் கைமாறு வேண்டாமல் முன்வந்து
வாரித் தருபவரை வாழ்த்து.

ஆண்டாள் அழகர் பொறியியற் கல்லூரி 
சார்ந்த இடத்தை நடிகர் விஜயகாந்த்
தேர்ந்தெடுத்து நல்லடக்கம் செய்வதற்கு நேயமுடன்
நோயச்சம் இன்றி வழங்குகின்றார்! வாழ்த்துவோம்!
ஈவிரக்க நாயகனை வாழ்த்து.

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டென்றார்  வள்ளுவர்!
இந்தக் குறளோ நடிகர் விஜயகாந்த்
பண்பிற்கே சான்றாகும் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home