Thursday, June 18, 2020

முத்தொள்ளாயிர மோகனம்…36

கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர் தண்ணுஞ்சை தான்மிதியாப்-பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
கோழியர்கோக் கிள்ளி களிறு.

உறையூர்த் தலைவனாம் கிள்ளியின் யானை
மறைநகர் காஞ்சியி லோர்க்காலும் பாக்கள்
மணக்கின்ற உச்சயினி தன்னிலோர்க் காலும்
முனைப்புடன் ஈழத்தி லோர்க்காலும் வைத்தே
தனதூராம் யானையைச் சீறியே கோழி
எதிர்த்த உறையூரி லோர்க்காலும் ஊன்றி
வியக்கவைக்கும் காட்சியைக் காட்டுகின்ற பாடல்!
சிலிர்க்கவைக்கும் காட்சிதான் காண்.

மதுரை பாபாராஜ்.

ஹைக்கூ
கச்சியில் ஒருகால்;உச்சயினியில் ஒருகால்
மிச்சமுள்ள ஒருகால் ஈழத்தில் வைத்து வந்ததே
அச்சமூட்டும்  உறையூர் கிள்ளியின் யுத்தக் களிறு

கே ஜி ராஜேந்திர பாபு

0 Comments:

Post a Comment

<< Home