Thursday, June 18, 2020

முத்தொள்ளாயிர மோகனம்…37

மந்தரம் காம்பா: மணிவிசும்(பு) ஓலையாத்:
திங்கள் அதற்கோர் திலதமா—எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே
கொற்றப்போர்க் கிள்ளி குடை.

மாமலை மந்தரம் காம்பாக, விண்பரப்பு
மேற்பரப்பாய் மாற நிலவோ கலசமாக
ஊற்றெடுக்கும் முத்திசை நீரைக் குளிர்விக்கும்
கொற்றக் குடையாக கிள்ளியின் ஆட்சியிங்கே
அற்புதந்தான் மக்களுக்கு! பார்.

மதுரை பாபாராஜ்

ஹைக்கூ
மந்தரமலை காம்பாய் வானமே  மேற்பரப்பாய்
சந்திர வட்டம்  பொற்கலசமாய் விளங்குமே
எந்த போரிலும் வாகைசூடும்  கிள்ளியின் குடை
                                                                         
கே ஜி ராஜேந்திர பாபு


0 Comments:

Post a Comment

<< Home