Tuesday, July 21, 2020

சித்தப்பா தினைவேந்தல்

சித்தப்பா அழகர்சாமி அவர்களின் நினைவு நாள் கவிதை!

20.07.20

எங்கள் குடும்பத்தின் இன்பத்தில் துன்பத்தில்
பங்கெடுத்தே ஆர்வமுடன் நல்ல அறிவுரைகள்
தந்தவர் ! எல்லோ ரிடத்திலும் அன்பாக
பண்புடன் பேசியவர் தான்.

உலக வரலாற்றுச் செய்திகள் எல்லாம்
நினைவாற்றல் கொண்டேதான்  சொல்லி விளக்கி
அனைவரையும் நாளும் கவர்ந்தவர் என்றால்
மிகையில்லை உண்மைதான் பார்.

துல்லியமாய்ச் சோதிடம் பார்க்கின்ற ஆற்றலில்
வல்லவர்!  வாழ்க்கையில் சோர்ந்துபோய்ப்  பார்த்தால்
சொல்கின்ற ஆக்கபூர்வ  ஊக்கமிகு சொற்களால்
துள்ளி வருவார் நிமிர்ந்து.

தனக்கென வாழ்வில் தனிவழி கண்டே
முனைப்புடன் நாளும் உழைத்தேதான் வாழ்ந்து
நினைவிலே என்றென்றும் நிற்கின்றார் சித்தப்பா !
வணங்குகிறேன் ஆசிகள் கேட்டு.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home