Tuesday, July 21, 2020

GSN PAUL இயற்கை எய்தினார்!

அஞ்சலிக்கவிதை!

21.07.20

பென்னர் தொழிற்சாலை ஆற்ற லுடனியங்க
தன்நிக ரில்லா உழைப்பை வழங்கியவர்!
அக்கால பென்னரின் மூச்சாய்த் திகழ்ந்தவர்!
வெற்றியின் சாதனைக்கு வித்து.

எளிமையும் நேர்மையும் ஆணவ மற்ற
தனிமனிதப் பண்பும் ஒழுக்கமும கொண்டு
தெளிவாக வாழ்ந்தவர் பால்ஆவார்! போற்று!
கனிவான பண்பாளர் பால்.

கடமையில் கண்ணுங் கருத்துமாய் ஒன்றி
அடலேறாய்த்  தன்பொறுப்பை நாள்தோறும் ஏற்றே
அடக்கமுடன் பன்முக ஆற்றலைக் காட்டி
உயர்ந்தவர்
புகழுடன் வாழ்க நிலைத்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home