Friday, August 14, 2020

குறளோவியர் சௌம்யா

 திருக்குறள் ஓவியர் சௌம்யா அவர்களுக்கு வாழ்த்து!


1330 குறளோவியங்கள்!


ஆயிரத்து முந்நூற்று முப்பது தேன்குறளை

ஓவியமாய்த் தீட்டுகின்ற சௌம்யா முயற்சியைப்

பாமணக்க வாழ்த்துவோம்! பல்லாண்டு வாழியவே!

ஓவியத்தின் வெற்றிக்கு வாழ்த்து.


ஒவ்வொரு நாளும் ஒருகுற ளோவியம்!

சௌம்யாவின் தூரிகை தீட்டி மகிழ்கிறது!

இந்திய மங்கையின் அற்புத ஆற்றலோ

வண்டமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

14.08.20


0 Comments:

Post a Comment

<< Home