Friday, August 21, 2020

எங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி மலரும் நினைவு

 எங்கள் வீட்டுப் பிள்ளையார் சதுர்த்தி அந்தக் காலத்தில்!


எனது தந்தையும் தாயும் குடும்பமும்  முழு ஈடுபாடுடன் வணங்கிய விழா!


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியே

மும்முரமாய் இங்கே விநாயகர் தோன்றிய

இந்நாளைச் சீரும் சிறப்புமாய்க் கொண்டாடி

வந்தனர் உள்ளவரை தான்.


குளக்கரையில்  மாளிகையில்  எங்கிருந்த போதிலும்

வரந்தரும் சோசலிச சிந்தனை கொண்ட

சமத்துவப் பிள்ளையார் என்றுரைப்பார் தந்தை!

மனதார கொண்டாடி னார்.


இந்த  நினைவுகள் உள்ளத்தில் காலையில்

வந்துவந்து நின்றன! பாவினமாய் மாற்றினேன்!

தாய்தந்தை தாள்தொட்டு வாழ்த்தி வணங்குகிறேன்!

ஏக்கப் பிழிவிலே நான்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home