Saturday, August 22, 2020

பாலாவின் சங்கச் சுரங்கம்


 பாலாவின் சங்கச் சுரங்கம்

இணையப்பத்து


இரண்டாம் பத்து வாழ்த்து.


22.08.20


கலித்தொகை பாடல் வரிகளைக் கொண்டு

வழங்குகிறார் சங்கச் சுரங்கம் இரண்டாம்

உரையின் தொடக்கமாய் பாலா மொழியில்!

முழங்குகின்ற பாலாவை வாழ்த்து.


தொல்காப் பியத்தின் விளக்கம் பயன்படுத்தும்

சொல்முதலாய்ச் சொல்லித்தான் சங்க இலக்கியச்

செய்திச் சுரங்கத்தில் சென்று பயணித்துச்

சொல்லிய பாலா அணுகுமுறை அற்புதமே!

வல்லமை கொண்டவரை வாழ்த்து.


சான்றுகளை பாலா குறள்களுடன் ஒப்பிட்ட

பாங்கிலே மெய்மறந்தேன் ஆற்றலை எண்ணித்தான்!

ஆங்காங்கே சான்றுகளை அள்ளி எடுத்தேதான்

தேன்கனிகள் தந்தவரை வாழ்த்து.


பகடைக்காய் சொல்லும் இலக்கியச் செய்தி

புறவாழ்வில் மக்களோ அன்றிருந்து இன்றும்

நடைமுறை யாகத்தான் மேற்கொண்ட

ஆட்டம்

இதுவென்றார் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home