Monday, January 11, 2021

76 பொருள் செயல்வகை

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

76 பொருள் செயல்வகை

குறள் 751:

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்.


மதிக்கத் தகாதவரைக் கூட மனிதன் 

மதிப்பளிக்க வைத்தல் பொருள்.

குறள் 752:

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு.


பணமில்லை என்றால் இகழ்வார்! வாழ்வில்

பணமிருந்தால் செய்வார் சிறப்பு.

குறள் 753:

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று.


பொருளோ ஒளிவிளக்காம்! எவ்விடத்தும் சென்றே

இருளினை நீக்கும் உணர்.

குறள் 754:

அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

தீதின்றி வந்த பொருள்.


அறவழியில் ஈட்டிய செல்வமோ இன்பம்,

அறத்தை வழங்குமென்று சாற்று.

குறள் 755:

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்.


அருளையும் அன்பையும் மீறிவந்த செல்வம்

பெருஞ்செல்வம் என்றாலும் நீக்கு.

குறள் 756:

உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்.


சுங்கப் பொருளும் வரிப்பொருளும்  தெவ்வர்கள்

தந்தபொருள் ஆட்சிக் குரித்து.

குறள் 757:

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு.


அன்பென்னும் தாயின் அருள்குழந்தை

தான்வளரும்

செல்வச் செவிலியால் தான்.

குறள் 758

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.


கைப்பொருள் கொண்டு செயல்செய்தல்

யானைப்போர்

குன்றேறி பார்ப்பதுபோ லாம்.

குறள் 759:

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃதனிற் கூரிய தில்.


உழைத்துப் பொருள்சேர்க்கும் பண்பான வாழ்வில்!

பகைச்செருக்கின் வேரறுக்கும் ஆயுதம் 

இங்கே

பொருளின்றி வேறில்லை யே.

குறள் 760:


ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு.


பொருள்களை நேர்வழியில் சேர்த்தால் 

அறமும்

மகிழ்வளிக்கும் இன்பமும்  சேரும்

எளிதாய்!

அகங்குளிர வாழலாம் சாற்று.


மதுரை பாபாராஜ்






































0 Comments:

Post a Comment

<< Home