Monday, January 11, 2021

திரு& திருமதி துரைசாமி இணையருக்கு வாழ்த்து

 திரு & திருமதி துரைசாமி திருவாசகம் இணையருக்கு வாழ்த்து


முக்கடல் நாட்டுப் பறவை  மயிலினந்தான்!

முப்பால் வழங்கியவர் வள்ளுவர்! செம்மொழி

நற்றமிழ் வாழ்கவென்றே சொல்பொறித்துக் கேடயம்

பற்றுடன் தந்தார் விசாகைத் தமிழ்க்கலை

மன்றத்தார் வாழியவே! மாத்தமிழ்போல் வாழியவே!

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

அன்பர்க்கு,

செந்தமிழ் ஐயனுடன்  முக்கடல் நாட்டுப் பறவையையும் இணைத்த நீங்கள்  எங்களையும் இணைத்தமைக்கு நன்றி. முக்கடல்  நாட்டுப் பறவை முப்பால் ஒப்பீட்டின்  அழகே அழகு. நன்றி. 🙏

வாழ்க வள்ளுவம் !



0 Comments:

Post a Comment

<< Home