Sunday, January 10, 2021

பாலாவின் சங்கச் சுரங்கத்திற்கு வாழ்த்து

 நிகழ்ச்சிக்கு வாழ்த்து.


களமும் ரோஜா முத்தையா நூலகமும் 

இணைந்து வழங்கும்

கவிஞர் பாலாவின் சங்கச்சுரங்கம்!

இணையப்பத்து -- மூன்றாம் பத்து

நான்காம். உரை!

தலைப்பு: ஆரியர் கயிறாடு பறை!

நாள்: 09.01.21 சனிக்கிழமை மாலை 6.30

ID 817 9565 5462

சங்கச் சுரங்கத்தில் ஆழ்ந்தே அகழ்ந்தெடுத்தே

எங்கெங்கோ சான்றுகளைச் சேகரித்து கேட்போர்க்குச்

சங்க விருந்தளித்த பாலாவை வாழ்த்துவோம்!

வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.


பறைவகைகள் எல்லாம் தொகுத்தளித்த பாங்கில்

நிறைவாகச் சென்றதே பேச்சின் திசைகள்!

வெறுப்பு கொல்கிறது! அன்பிற்கோ என்றும்

மரணமில்லை! என்பதே வேறுபாடாம்! என்ற

மகாத்மாவின் பொன்மொழி கண்டோம் உவந்து!

மகத்தான பேச்சுக்கு வாழ்த்து.


இமயமலைச் சாரலில் சிந்துநதிப் பக்கம்

மணலைச் சலித்தேதான் தங்கத்தைச் சேர்க்கும்

மனங்கவர் செய்தி  இலக்கியம் சொல்லும்

அருமையான செய்தியென்றார் வாழ்த்து.


தங்கத்தை வாங்கும் மனிதர் படம்பார்த்தோம்!

சங்கச் சுரங்கத் தலைப்புக்கே ஏற்றவாறு

கண்முன் பறைகளைக் காட்டினார்! கூத்தாடும்

அன்பர்கள் வாழ்க்கையைச் சொன்னார்கள் கோரிக்கை

தந்தார் அரசுக்குத் தான்.


தெருவில் அருகருகே துன்பப் பறையும்

திருமண வீட்டிலே இன்பப் பறையும்

ஒலிகளை மீட்டும் வேறுபாடு கொண்ட

கவிதைகள் சொன்னார் படித்து.


வெளிநாட்டுப் பேராசிரியைப் பேட்டி தமிழில்

அளித்ததைக் கேட்டோம் வியந்து.


அருமை நிகழ்வில் பலப்பல செய்தி!

தருவித்த பாலா தொடர்க நிகழ்வை!

புருவம் உயர்த்தும் உழைப்பாலே பாலா

தருகின்றார் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home