Tuesday, January 19, 2021

91 பெண்வழிச் சேறல்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

91 பெண்வழிச்சேறல்

குறள் 901:

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்

வேண்டாப் பொருளும் அது.


கடமையைக் கண்ணாய்க் கருதுவோர் இல்லாள்

சிறைக்குள்ளே வாழமாட்டார் கூறு.

குறள் 902:

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்

நாணாக நாணுத் தரும்.


கொள்கைக் கொடியேந்தும்  வீரனோ பெண்பின்னே

செல்வது வெட்கம் தரும்.

குறள் 903:

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

நல்லாருள் நாணுத் தரும்.


மனைவிக்கே அஞ்சுபவன்  நல்லார்முன் வெட்கித்

தலைகுனிந்து வாழ்வான் விளம்பு.

குறள் 904:

மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.


மனைவியுடன் இல்லறத்திற் கஞ்சுபவன்

செய்யும்

செயல்திறனை ஏற்கமாட்டார் இங்கு.

குறள் 905:

இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல்.


இல்லாளுக்  கஞ்சி நடப்பவர்கள், அஞ்சுவார்

நல்லார்க்கு நன்மைசெய்யத் தான்.

குறள் 906:

இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்

அமையார்தோ ளஞ்சு பவர்.


உயர்ந்தவர்போல் வாழ்ந்தாலும் பேரழகு இல்லாள்

வயமானால் தூற்ளுவார் கூறு.

குறள் 907:

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து.


அடங்கி நடக்கின்ற ஆண்மைக்கு, நாணம்,

மடம்மிகுந்த பெண்மையே மேல்.

குறள் 908:

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்

பெட்டாங் கொழுகு பவர்.


பெண்மயக்கம் கொண்டவர்கள் நல்லதும் செய்யமாட்டார்  

நண்பரையும் பார்க்கமாட்டார்  கூறு.

குறள் 909:

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்

பெண்ணேவல் செய்வார்கண் இல்.


பெண்ணுக் கடிமையாய் வாழ்வோர் அறச்செயலோ

மற்றவையோ செய்யமாட்டார் கூறு.

குறள் 910:

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்

பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

நெஞ்சுறுதி, சிந்தனை கொண்டவர்கள்

பெண்களின்

பின்செல்ல மாட்டார் உணர்.































0 Comments:

Post a Comment

<< Home