Tuesday, January 19, 2021

92 வரைவின் மகளிர்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

92 வரைவின் மகளிர்

குறள் 911:

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும்.


அன்பின்றி நம்பொருளை நாடும் பொதுமகளிர்

இன்சொற்கள் துன்பம் தரும்.

குறள் 912:

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்

நயன்தூக்கி நள்ளா விடல்.


என்னலாபம் என்றே கணித்துப் பழகிடும்

பெண்களை நம்பவேண்டாம் இங்கு.

குறள் 913:

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று.


பொருளைக் குறிவைத்தே பொய்யாய்த்   தழுவல்,

இருளில் பிணந்தழுவல் போல்.

குறள் 914:

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்

ஆயும் அறிவி னவர்.


அருள்விரும்பும் சான்றோர் பொருள்விரும்பும் பெண்ணை

இழிவாய்க் கருதுவர் காண்.

குறள் 915:

பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்

மாண்ட அறிவி னவர்.


அறிவார்ந்த சான்றோர் பொதுமகளை நாடி

நெறிதவற மாட்டார் உணர்.

குறள் 916:

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள்.


புகழ்நாடும் சான்றோர் இருமனப் பெண்ணின்

முறையற்ற தோள்விரும்பார் கூறு.

குறள் 917:

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்

பேணிப் புணர்பவர் தோள்.


இருமனப்  பெண்தோளை சஞ்சலம் கொண்டோர் 

தழுவிக் களித்திருப்பார் சாற்று.

குறள் 918:

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப

மாய மகளிர் முயக்கு.


பொதுமகள் வஞ்சக எண்ணத்தில் வீழ்ந்த 

அறிவிலிக்கு ஏற்பட்ட மோகத்தை மாய

மகளிர்

மயக்கமெனக் கூறும் உலகு.

குறள் 919:

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு.


இருமனப் பெண்டிரின் தோள்கள் இழிந்தோர்

உழன்று புரள்கின்ற சேறு.

குறள் 920:

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.


பொதுமகளிர் சூதாட்டம் மற்றும் மதுகுடித்தல்

அறவளத்தை நீக்கும் தொடர்பு.







 























0 Comments:

Post a Comment

<< Home