Thursday, January 21, 2021

97 மானம்

 குறள்களுக்குக் குறள்வடிவில் கருத்து

97 மானம்

குறள் 961:

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்

குன்ற வருப விடல்.


செய்தாக வேண்டுமென்ற போதிலும் தன்பெருமை

குன்றுவதைச் செய்யமாட்டார் இங்கு.

குறள் 962:

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர்.


புகழ்வேண்டும் என்றே குடும்பப் பெருமை

தடம்புரளச் செய்யும் செயலைத் தவிர்ப்பார்!

குடிப்பெருமை மானமே மூச்சு.

குறள் 963:

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.


உயர்ந்த நிலையில் பணிவு, சரியும்

நிலையில் பெருந்தன்மை நன்று.

குறள் 964:

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை.


பெரியோர் தரந்தாழ்ந்தே மானம் இழந்தால்

தரையில் விழுந்த முடியாய் மதிப்பார்!

உயர்தரப் பண்பே மதிப்பு.

குறள் 965:

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின்.


குணக்குன்றாய் உள்ளோர் இழிசெயல் தன்னை

மணியளவு செய்தாலும் தாழ்வார் நிலையில்!

குணப்பிறழ்வு வாழ்வின் சரிவு.

குறள் 966:

புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்

றிகழ்வார்பின் சென்று நிலை.


இகழ்ச்சியை ஏற்றும் மரியாதை விட்டும்

புகழ்வருமா? என்னபயன் சொல்.

குறள் 967:

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று.


மதியார்பின் சென்றேதான் வாழ்வதை விட்டே

அழிவினை ஏற்பது மேல்.

குறள் 968:

மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த இடத்து.


சாவா மருந்தில்லை! நம்பெருமை விட்டேதான்

வாழ்தல் இழிவென்றே சொல்.

குறள் 969:

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.


முடிகள் உதிர்ந்தால் கவரிமா சாகும்!

மதிப்பிழந்தே மானம் இழந்தால் உயர்ந்தோர்

உயிர்நோக வாழமாட்டார் இங்கு.

குறள் 970:

இளிவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழு தேத்தும் உலகு.


மானம் இழக்கும்  இழிநிலையில் 

வாழாதோர் 

சான்றாண்மை போற்றும் உலகு.































0 Comments:

Post a Comment

<< Home