Monday, January 11, 2021

விடியலைப் படைத்துக் காட்டு

 

விடியலைப் படை!

விழிகளில் ஒளியை ஏற்று--நாளை

விடியலைப் படைத்துக் காட்டு!

வன்முறைப் பாதையைத் தூற்று--அது

என்றும் வேதனை ஊற்று!

அறநெறி தென்றல் காற்று--அது

அமைதிக்குப் பாடும் வாழ்த்து!

வறுமைப் பிணியைப் போக்கு--அதற்கு

வழிகளைத் திரட்டி முடுக்கு!

துரோகம் செய்வதை நீக்கு--நெஞ்சில்

தூய எண்ணத்தைத் தேக்கு!

எதற்கெடுத் தாலும் விரக்தி--பொங்கும்

நிலையை உடனே துரத்து!

குறள்நெறி தன்னைப் போற்று-- வாழ்வில்

அறநெறி விளக்கை ஏற்று!

நம்பிக் கைதான் வாழ்க்கை--அதில்

மலரும் வெற்றிப் பூக்கள்!


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home