Tuesday, October 12, 2021

சூழ்நிலையின் கைதி!

 சூழ்நிலையின் கைதி!


உலுக்கும் துயர நிகழ்வுகள் நெஞ்சை

உலுக்கிப் பிழிந்தே உரசிடும் போது

பெருக்கெடுக்கும் தேம்பித்  திரண்டே 

வெடிக்கும்!

கலுழ்ந்தன கண்கள்தான் காண்.


சூழ்நிலைகள் பந்தாடித் தூக்கி எறிந்திருக்க

காலத்தின் காலடியில் சிக்கிவிட்ட பந்தானேன்! 

கோலத்தில் வேடங்கள் ஏந்தி நடிக்கின்றேன்!

சூழ்நிலையின் கைதியானேன் நான்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home