Monday, November 29, 2021

கொடுமை


கொடுமை!

குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

மு.வ உரை:

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.


வெளிநாட்டில் பெற்றோர்க்கு வேலை! அவரோ

செவியின்பம் கேட்பதற்குக் காயலையில் பார்ப்பார்!

தொடுதல் கிடைக்காது! ஏற்கலாம் இஃதை!

ஒருசிலர் ஊருக்கு வேண்டுமென்றே போவார்!

தொலைபேசி வாய்ப்பே குழந்தைக ளுக்கு!

கொடுமைதான் இத்தகைய வாழ்வு.


காயலை-- SKYPE


மதுரை பாபாராஜ்

 

0 Comments:

Post a Comment

<< Home