Friday, July 21, 2023

அம்மா என்றால்


 குறள் விளக்கம்!


அம்மா என்றால் அம்மாதான்!


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


பள்ளிக்குச் சென்றுவரும் பிள்ளைகள் அம்மாவை

துள்ளித்தான் கட்டிப் பிடித்திருக்கும்! அம்மாவும்

அள்ளி அணைத்தே அகமகிழ்வாள் அன்றாடம்!

பிள்ளை உலகே தனி.


வந்தவுடன் ஆடுவதும் பேசுவதும் பள்ளியில்

என்ன நடந்ததென்று  சொல்வதும் தேன்மழலை

சின்னவாய்ச் சிந்துவதைக் கேட்பதே இன்பமாம்!

கண்குளிரக் கண்டிருப்பாள் தாய்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home