Thursday, July 20, 2023

மாறும் மனநிலை




மாறும் மனநிலை!

நண்பர் ரகுநாத் அனுப்பிய காணொளி!

கேட்டதில் பிடித்தது!

பார்வை இழந்தவள்! இங்கே அனைத்தையும்
பார்க்க முடியவில்லை என்றே வெறுத்திருந்தாள்!
தேடிவரும் காதலனை மட்டும் விரும்பினாள்!
பார்வை கிடைத்துவிட்டால் உன்னை மணந்திடுவேன்!
ஆர்வமுடன் சொன்னாள் மகிழ்ந்து.

யாரோ ஒருவரங்கே கண்தானம் செய்தவுடன்
காதலன் சொன்னான் இந்த உலகத்தைக்
காணலாம் இப்போது! என்னை மணப்பாயா?
ஆர்வமுடன் கேட்டான் துடித்து.

காதலனைப் பார்த்தாள்! பார்வை இழந்தவன்!
நானுன்னை ஏற்கமாட்டேன் என்றாள் மறுத்தேதான்!
காதலன் ஏக்கமுடன் சென்றான்! என்னுடைய
ஊடகக் கண்களை நன்றாகப் பார்த்துக்கொள்!
தேனகமே! என்றே மடலெழுதி சொல்லிவிட்டான்!
மான்விழியாள் பார்த்தாள் திகைத்து.

இப்படித்தான் நமது மனதிற்குள் எண்ணங்கள்
அப்படியே மாறுகின்ற கோணத்தில் வாழ்கிறோம்!
நம்நிலை மாறியதும் நாமிங்கே மாறுகிறோம்!
என்றும் ஒரேநிலைதான் நன்று.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home