Thursday, July 20, 2023

ஆண்டவருக்கு நன்றி


திரு ஜெயக்குமார் அவர்களின் மனைவி திருமதி மெர்சி இயற்கை எய்திவிட்டார். வருந்துகிறோம்.

நாங்கள் எதிர்வீட்டில் இருந்தபோது தினமும் ஆண்டவருக்கு நன்றி சொன்னதைக்  கேட்டிருக்கிறேன்.

அதைநினைத்து கவிதை எழுதினேன்:


நாள்தோறும் ஆண்டவருக்கு நன்றி!


நேற்றுவரை நன்றாக வாழவைத்த ஆண்டவரே

போற்றி வணங்குகிறேன் நன்றி நவில்கின்றேன்!

ஆற்றலுடன் இன்று விழிக்கவைத்த ஆண்டவரே

வாழ்வில் எனக்கென்ன வேண்டும் அறிவீர்கள்!

நாளும் திருப்தியாய் வாழ்வேன் சரணடைந்து!

நாள்தோறும் சொன்னார் மகிழ்ந்தேதான் வாழ்ந்திருந்தார்!

நேற்றிருந்தார் இன்றில்லை! அம்மாவை எண்ணித்தான்

தேற்றித்தான் வாழ்கிறோம் இங்கு.

மதுரை பாபாராஜ்

வசந்தா

20.07.23


 

0 Comments:

Post a Comment

<< Home