Wednesday, July 19, 2023

காதல் பருவம் வரை காத்திரு



 காதல் பருவம்வரை காத்திரு!


படிக்கும் பருவத்தில் கற்பதே வாழ்வு!

படிக்கும் பொழுதிலே காதலென்று மாறி

நெறிபிறழும் வீண்வேலை தேவையில்லை இங்கே!

படிப்பை முடித்துப் பணிக்களம் சேர்ந்து

பருவத்தில் இல்லறத்தை ஏற்றால் விவேகம்!

பருவத்தின் பக்குவம் வந்தபின் காதல்

அரும்பினால்  ஏற்பார் உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home