வசந்தா கவிதைகள்!
வசந்தா கவிதைகள்!
விமலாவுக்காக
அருமையான புன்சிரிப்பு
அரும்புபோன்ற சொல்வரிசை
எறும்புபோன்ற சுறுசுறுப்பு
எப்பொழுதும் ஓடிவரும் துறுதுறுப்பு!
என் கண்மணி விமலாவுக்கு
கண்ணிலே கலக்கத்தின் எதிரொலிதான்
பாசத்தின் படைப்புதான்
நேசத்தின் வலைவிரிப்புத்தான்
அன்பின் சொந்தம்தான்!
என் செல்ல விமலாதான்!
தூங்கிவிட்ட இன்ப வாசலை
தூய்மையுடன் தட்டிவிட்டு
துவண்டுவிட்ட மாலையை
துடிப்புடனே எடுத்துவிட்டாள்
என் அருமை விமலாதான்!
எங்கிருந்தோ வந்த பந்தம்
எட்டு சில நாட்கள்தான்
என்றபோதும் துடிக்குது இதயம்ஏனிந்த தவிப்பு ! புரியுமா?
என் இனிய விமலாவுக்கு!

0 Comments:
Post a Comment
<< Home