ஆள்வினை உடைமை--62
திருக்குறள் குழந்தைப் பாடல்
----------------------------------------------------------------
ஆள்வினை உடைமை--62
--------------------------------------------------------------
விடாமுயற்சியின் எல்லையே வெற்றியாகும்!
----------------------------------------------------------------
முடியா தென்பதே எதுவுமில்லை!
முயன்றால் முடியும் அனைத்துமிங்கே!
செயலைக் குறையுடன் விட்டுவிட்டால்
உலகம் உன்னை விட்டுவிடும்!
பிறருக் குதவும் மனமெல்லாம்
முயற்சிப் பண்பில் தெரிகிறது!
முயற்சி யற்றோன் பிறருக்கு
உதவி செய்வேன் என்றுரைத்தல்
கோழை வாளைச் சுற்றுதல்போல்
எந்தப் பயனும் தருவதில்லை!
தன்னலம் இன்றிச் செயல்முடிப்போன்
சுற்றத்தைக் காக்கும் தூணாவான்!
முயற்சி வளர்க்கும் செல்வத்தை!
தளர்ச்சி விதைக்கும் வறுமையை!
சோம்பல் உள்ளம் இருள்மயந்தான்!
முயற்சி மனமோ ஒளிமயந்தான்!
உறுப்புக் குறையோ பழியல்ல!
முயற்சிக் குறையோ பழியாகும்!
விதியே உதவ மறுத்தாலும்
உழைப்பின் முயற்சி வெற்றிதரும்!
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home