Saturday, April 25, 2009

எங்கும் கோடி! எதிலும்கோடி!

கோடிகோடி மக்கள் கடையராய் வாழ்கின்றார்!
வாடி வதங்குகின்றார்! மக்களுக்குத் தொண்டாற்ற
தேடிவரும் வேட்பாளர் கோடிகோடி வைத்துள்ளார்!
கோடிக்குக் கோடியா காப்பு?

கடையராய்க் கோடிமக்கள்! நாள்தோறும் அந்தப்
படையிலே கோடிவந்து சேரும் -- படையெடுக்கும்
வேட்பாளர் கோடியிலும் கோடிசென்று சேர்ந்திடும்!
நாட்டில் சமத்துவம் என்று?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home